செய்திகள் :

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

post image

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோவை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னதாக பதிவிட்ட அந்த விடியோவில், குழந்தையின் தொப்புள் கொடி வெட்டும் காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இர்ஃபானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், இர்ஃபான் பதிவிட்ட விடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, துபை மருத்துவமனையில் பரிசோதனை செய்து அவரது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட இர்ஃபான், குடும்ப நிகழ்ச்சியில் அதனை வெளியிட்டு, விடியோவாக யூடியூப்பிலும் பதிவிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி இர்ஃபான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிக்க : மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்!

இந்த நிலையில், தொப்புள் கொடி வெட்டும் விடியோவை இர்ஃபான் பதிவிட்டது குறித்து பேசிய மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி, இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசியதாவது:

“யூடியூபர் இர்ஃபான் என்பவர் மருத்துவமனையின் பிரசவ அறைக்கு கேமிராவை எடுத்துச் சென்று தனது மனைவியின் பிரசவத்தை பதிவிட்டுள்ளார். யூடியூபில் மேலும் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தொப்புள் கொடியை அவரே வெட்டியுள்ளார். இது குற்றம்தான்.

மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்படும். அவரின் விளக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவச் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும். தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். அதனை பொறுத்து மருத்துவமனையின் உரிமம் திரும்பப் பெறப்படும்.

இர்ஃபானின் பழைய புகாரும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொப்புள் கொடியை பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே வெட்ட வேண்டும்.

யூடியூப் பக்கத்தில் இருந்து விடியோவை உடனடியாக இர்ஃபான் நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முரசொலி செல்வம் படத் திறப்பு விழா திங்கள்கிழமை(அக்.21) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசொலி செல்வத்தின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து மேடைய... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மக்களுக்கு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்ட... மேலும் பார்க்க