செய்திகள் :

மேயர், அவரின் கணவர் படுகொலை வழக்கு - 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு; ஹைஅலர்ட்டில் சித்தூர்!

post image

ந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மேயராக இருந்தவர் அனுராதா. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் கட்டாரி மோகன். கடந்த 17-11-2015 ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலகத்தில் தனது அறையில் இருந்த மேயர் கட்டாரி அனுராதா கைத்துப்பாக்கியால் சுட்டப்பட்டு, அரிவாளாலும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மனைவியின் மரண ஓலம் கேட்டு அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த கட்டாரி மோகனும் படுபயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

கணவர் மோகனுடன் மேயர் அனுராதா

சொத்து தகராறால் மேயர் தம்பதி தீர்த்துகட்டப்பட்டது தெரியவந்தது. இந்த படுகொலைகள் தொடர்பாக, மேயரின் தம்பி சிண்டு சந்திரசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

10 ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம், `சித்தூர் மாநகரத்தில் பொது மக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம்’ என்று 144 தடை உத்தரவையும் காவல்துறை பிறப்பித்திருந்தது.

அன்று, முதல் குற்றவாளியான சிண்டு சந்திரசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள் வெங்கடாசலபதி, ஜெய்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், கங்கனப்பள்ளி வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கைது
கைது

இதையடுத்து, `குற்றவாளிகள் 5 பேருக்கும் அக்டோபர் 31-ம் தேதி (இன்று) தண்டனை அறிவிக்கப்படும்’ என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, கொடூர கொலையாளிகளான சிண்டு சந்திரசேகர் உட்பட 5 பேருக்கும் `மரண தண்டனை’ விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக, சித்தூரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகாசி: அரசு ஒப்பந்த பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி; போலி பி.டி.ஓ கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டியைச் சேர்ந்த கண்ணன் (51) அச்சகம், டிசைனிங் மற்றும் கிரானைட் அறுக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.அந்நிறுவனத்தில் பேராபட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் பொறிய... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ... மேலும் பார்க்க

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ண... மேலும் பார்க்க

கேரளா: மகன், மருமகள், பேத்திகளை வீட்டில் பூட்டி தீவைத்து கொன்ற 82 வயது முதியவருக்கு தூக்குத் தண்டனை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (82). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹ்ரா (17)... மேலும் பார்க்க

காரின் மீது சிறுநீர் கழித்த நபரை கண்டித்த இந்திய வம்சாவளி அடித்துக்கொலை - கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் எட்மண்டனில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர் அர்வி சிங் சாகூ (55). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில், அக்டோபர் 19-ம் தேதி அர்வி சிங் சாகூவும் அவரது மனைவிய... மேலும் பார்க்க

கரூர் : சம்பவ இடத்தில் வீடியோ ஆதாரங்கள், நவீன கேமராக்களுடன் சி.பி.ஐ விசாரணை!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்தகொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்... மேலும் பார்க்க