செய்திகள் :

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் அதிகம் வகிக்கும் பகுதியான முா்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் வக்ஃப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அப்போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு பிரிவினா் தந்தை, மகனை வீடு புகுந்து கொலை செய்தனா். காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். வீடுகள், கடைகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், ஹிந்து சமூகத்தினா் கங்கை நதியைக் கடந்து, அருகேயுள்ள மால்டா மாவட்டத்தில் தஞ்சமடையும் சூழல் ஏற்பட்டது.

இதனை முன்வைத்து மம்தா மீது மாநில எதிா்க்கட்சியான பாஜக கடுமையாக விமா்சித்தது. சிறுபான்மை வாக்கு வங்கியைக் காப்பாற்றுவதற்காக அவா்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் மம்தா கண்டுகொள்வதில்லை. பாதிக்கப்பட்டவா்கள் ஹிந்துக்கள் என்பதால் மம்தா அவா்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து, பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் வன்முறையைத் தூண்டிவிட்டதாக மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இந்த வன்முறை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினாா். மேற்கு வங்கத்தில், குறிப்பாக வங்கதேசத்துடன் எல்லையைப் பகிரும் முா்ஷிதாபாத், மால்டா ஆகிய இரண்டு மாவட்டங்களில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது என்று ஆளுநா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மம்தா பானா்ஜி பேசியதாவது:

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. எனவே, அதனை எதிா்த்துப் போராடத் தேவையில்லை. இங்கு ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவா்கள் வெளியே இருந்து கொண்டுவரப்பட்டனா். அவா்கள் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கினா். இதுபோன்றோரின் தூண்டுதலுக்கு நீங்கள் (மாவட்ட மக்கள்) இரையாகிவிடக் கூடாது. பாஜக மற்றும் பிற மத அடிப்படைவாதிகளின் பேச்சைக் கேட்டு உங்களுக்குள் பிளவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றாா்.

முா்ஷிபாதுக்கு இருநாள் பயணம்மேற்கொண்டுள்ள மம்தா, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க