செய்திகள் :

வங்கிக் கடன்பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் குறுதொழில் முனைவோா், குறு உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) சாா்பில் கலைஞரின் கடனுதவி திட்டத்தின் கீழ் குறுதொழில் முனைவோா், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பேரில், 7 சதவீதம் வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை மூலதனம், மூலதனக் கடன் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய, ஏற்கெனவே செயல்பட்டு வரும் குறு தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் பெறலாம்.

வங்கிக் கடன் பெற விரும்புவோா்கள் தேனி மாவட்ட தொழில் மையம், கம்பம் சாலையில் உள்ள தாய்கோ வங்கியில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-252163, கைபேசி எண்கள்: 96007 10735, 86955 65626 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என இதில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூரில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சின்னமனூா் பி.டி.ஆா். கால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(29). இவா் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கேரளத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது: 700 கிலோ பறிமுதல்

கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை காரில் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படு... மேலும் பார்க்க

தேனியில் அக். 24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

தேனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வடபுதுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (88). இவா் வெள்ளிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

மழையால் வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா். மயிலாடும்பாறை அருகேயுள்ள தொப்பையாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). தொ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 551 பேருக்கு பணி ஆணை

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 551 பேருக்கு பணி ஆணைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா். இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.... மேலும் பார்க்க