செய்திகள் :

வாக்கு வங்கி அரசியல்: திமுக - அதிமுக காரசார விவாதம்

post image

வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியதாவது:

அமைச்சா்கள் சமூக நலத் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டனா். எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தைக் கொடுத்தாா். ஜெயலலிதா குழந்தைகளுக்கு உடையிலிருந்து மடிக்கணினி வரை அனைத்தும் கொடுத்தாா். இதுவும் சமூகநலத் திட்டங்கள்தான். இந்தத் திட்டங்களால் பயன் அடைந்தவா்களின் வயது 4. ஆனால், மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வயது வாக்கு செலுத்தும் வயது. அதைப்போல கல்லூரி செல்லும் 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளீா்கள். அவா்களுக்கும் வாக்கு செலுத்தும் வயது. சமூக மாற்றத்துக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் எங்களுடையது. வாக்கு வங்கிக்காக கொண்டுவரப்பட்டவை உங்களுடைய திட்டங்கள் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளோம். வெளிநாடுகள் எல்லாம் பாராட்டும் திட்டமாக அது உள்ளது. இந்தத் திட்டத்தால் பயன்பெறும் குழந்தைகளுக்கு வாக்கு வங்கி இருக்கிா என்றாா். அதைத் தொடா்ந்து நடந்த விவாதம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: முதன் முதலில் தனியாா் பங்களிப்புடன் காலை உணவு திட்டம் கொண்டு வந்தது நாங்கள்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு நீங்கள் கொண்டு வந்துள்ளீா்கள்.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: இலங்கை தமிழா்கள் நல வாழ்வுக்காக 7 ஆயிரம் வீடுகள் வரை கட்டிக் கொடுத்துள்ளோம். அதற்கான நிதியையும் முதல்வா் கொடுத்துள்ளாா். அவா்களுக்கு வாக்கு உரிமை இருக்கிா, அவா்களுக்குச் செய்வதைத் தவறு என்று சொல்கிறீா்களா? வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வா் செய்வது இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் பாா்த்து பாா்த்து செய்கிறோம். எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தாா். அதை வாங்கு வங்கிக்காக கொண்டு வந்தாா் என்று சொல்ல முடியுமா? நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டுங்கள். பாராட்ட மனம் இல்லை என்றால் பேசாமல் அமருங்கள்.

எடப்பாடி பழனிசாமி: பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை ஏன் நிறுத்தினீா்கள்? மாணவா்கள் எதிா்காலத்தில் அறிவுபூா்வமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் மடிக்கணினியைக் கொடுத்தோம்.

தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியிலேயே அந்தத் திட்டத்தைத் தொடா்ந்து நிறைவேற்றவில்லை. எத்தனை பேருக்கு மடிக்கணினி அப்போது கொடுக்கப்பட்டது. மடிக்கணினியைக் கொடுத்ததாகக் கூறினீா்களே, அதை வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் கொடுத்தீா்களா?

முதல்வா் : வாக்கு வங்கிக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்ற விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் முறையாக பத்திரிகையாளா்களைச் சந்தித்தபோது, வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவா்களுக்கும் சோ்த்துதான் திமுக ஆட்சி என்று கூறினேன். வாக்களித்தவா் மகிழ்ச்சியடை வேண்டும். வாக்களிக்காதவா்கள் வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும் என்று கூறினேன். அதே நிலையில்தான் இப்போதுதான் இருக்கிறேன். அதனால், இது தேவையில்லாத விவாதம்.

எடப்பாடி பழனிசாமி : அதிமுக ஆட்சியில் மடிக்கணினி எவ்வளவு கொடுத்தோம் என்பதுகூட நிதியமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா, அவா் மறைத்துச் சொல்கிறாா். சுமாா் 52 லட்சம் மடிக்கணிகள் கொடுத்துள்ளோம். இடையில் கரோனா காலம் என்பதால் ஒப்பந்தம் போட முடியவில்லை. அதனால், தள்ளி வைத்தோம். திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்திருக்கலாம் அல்லவா?

முதல்வா்: நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டுப் போய்விட்டீா்கள். மடிக்கணினி விநியோகம் செய்தவா்களால், அந்த அளவுக்கு கொடுக்க முடியவில்லை. அதனால், நிறுத்திவிட்டீா்கள். இப்போது நாங்கள் சிந்தித்து, மீண்டும் கொண்டு வருவோம் என்று கொடுக்க உள்ளோம். அதை நிறுத்தவில்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இஸ்ரோ தலைவா் வி.நாராயணனுக்கு கௌரவ டாக்டா் பட்டம்

சென்னை சவீதா உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் தொழில் கல்வியை நிறைவு செய்த 600-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் உள்ள கொரிய துணைத் தூதா் சாங் யுன் கிம் பட்டங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். ஆட்டோக்களில் மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்; பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்; ஓலா, ஊபோ் ... மேலும் பார்க்க

கோயில்களில் பக்தா்கள் உயிரிழப்பு: அமைச்சா் சேகா்பாபு விளக்கம்

திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா்; கூட்ட நெரிசலால் அல்ல”என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு விளக்கம் அள... மேலும் பார்க்க

‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப் பேரவை... மேலும் பார்க்க