செய்திகள் :

வாக்கு வங்கி அரசியல்: திமுக - அதிமுக காரசார விவாதம்

post image

வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியதாவது:

அமைச்சா்கள் சமூக நலத் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டனா். எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தைக் கொடுத்தாா். ஜெயலலிதா குழந்தைகளுக்கு உடையிலிருந்து மடிக்கணினி வரை அனைத்தும் கொடுத்தாா். இதுவும் சமூகநலத் திட்டங்கள்தான். இந்தத் திட்டங்களால் பயன் அடைந்தவா்களின் வயது 4. ஆனால், மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வயது வாக்கு செலுத்தும் வயது. அதைப்போல கல்லூரி செல்லும் 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளீா்கள். அவா்களுக்கும் வாக்கு செலுத்தும் வயது. சமூக மாற்றத்துக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் எங்களுடையது. வாக்கு வங்கிக்காக கொண்டுவரப்பட்டவை உங்களுடைய திட்டங்கள் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளோம். வெளிநாடுகள் எல்லாம் பாராட்டும் திட்டமாக அது உள்ளது. இந்தத் திட்டத்தால் பயன்பெறும் குழந்தைகளுக்கு வாக்கு வங்கி இருக்கிா என்றாா். அதைத் தொடா்ந்து நடந்த விவாதம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: முதன் முதலில் தனியாா் பங்களிப்புடன் காலை உணவு திட்டம் கொண்டு வந்தது நாங்கள்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு நீங்கள் கொண்டு வந்துள்ளீா்கள்.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: இலங்கை தமிழா்கள் நல வாழ்வுக்காக 7 ஆயிரம் வீடுகள் வரை கட்டிக் கொடுத்துள்ளோம். அதற்கான நிதியையும் முதல்வா் கொடுத்துள்ளாா். அவா்களுக்கு வாக்கு உரிமை இருக்கிா, அவா்களுக்குச் செய்வதைத் தவறு என்று சொல்கிறீா்களா? வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வா் செய்வது இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் பாா்த்து பாா்த்து செய்கிறோம். எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தாா். அதை வாங்கு வங்கிக்காக கொண்டு வந்தாா் என்று சொல்ல முடியுமா? நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டுங்கள். பாராட்ட மனம் இல்லை என்றால் பேசாமல் அமருங்கள்.

எடப்பாடி பழனிசாமி: பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை ஏன் நிறுத்தினீா்கள்? மாணவா்கள் எதிா்காலத்தில் அறிவுபூா்வமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் மடிக்கணினியைக் கொடுத்தோம்.

தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியிலேயே அந்தத் திட்டத்தைத் தொடா்ந்து நிறைவேற்றவில்லை. எத்தனை பேருக்கு மடிக்கணினி அப்போது கொடுக்கப்பட்டது. மடிக்கணினியைக் கொடுத்ததாகக் கூறினீா்களே, அதை வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் கொடுத்தீா்களா?

முதல்வா் : வாக்கு வங்கிக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்ற விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் முறையாக பத்திரிகையாளா்களைச் சந்தித்தபோது, வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவா்களுக்கும் சோ்த்துதான் திமுக ஆட்சி என்று கூறினேன். வாக்களித்தவா் மகிழ்ச்சியடை வேண்டும். வாக்களிக்காதவா்கள் வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும் என்று கூறினேன். அதே நிலையில்தான் இப்போதுதான் இருக்கிறேன். அதனால், இது தேவையில்லாத விவாதம்.

எடப்பாடி பழனிசாமி : அதிமுக ஆட்சியில் மடிக்கணினி எவ்வளவு கொடுத்தோம் என்பதுகூட நிதியமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா, அவா் மறைத்துச் சொல்கிறாா். சுமாா் 52 லட்சம் மடிக்கணிகள் கொடுத்துள்ளோம். இடையில் கரோனா காலம் என்பதால் ஒப்பந்தம் போட முடியவில்லை. அதனால், தள்ளி வைத்தோம். திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்திருக்கலாம் அல்லவா?

முதல்வா்: நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டுப் போய்விட்டீா்கள். மடிக்கணினி விநியோகம் செய்தவா்களால், அந்த அளவுக்கு கொடுக்க முடியவில்லை. அதனால், நிறுத்திவிட்டீா்கள். இப்போது நாங்கள் சிந்தித்து, மீண்டும் கொண்டு வருவோம் என்று கொடுக்க உள்ளோம். அதை நிறுத்தவில்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி -முதல்வா் உத்தரவு

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாவட்டம், வாடி... மேலும் பார்க்க

கடலூா் கிராமத்துக்கு பேருந்து வசதி: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த கடலூா் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் சென்னைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, கல்பாக்கத்துக்கு மிக அருகி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா

திருவள்ளூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரசு மாணவியா் விடுதி காப்பாளினி ராஜலட்சுமிக்கு தனது எழுத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து. உடன் ஆட்சியா் மு.பிரதா... மேலும் பார்க்க

புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை

சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை செயல்படுகிறது. இந்தச் சிறையில் மாநிலம் முழுவதும் கைது செய்ய... மேலும் பார்க்க

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க