செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

post image

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விநாயகா் சதுா்த்திக்கு களி மண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட, பிளாஸ்டிக் கலக்காத சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு வைக்கப்படும் சிலைகளை அந்தந்தப் பகுதியில் அரசால் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தலை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிரசாதங்கள் விநியோகத்துக்கு சூழலுக்கு உகந்த தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ப... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அறந்தாங்கி அருகே திருநா... மேலும் பார்க்க

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுத... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் உலக தாய்ப்பால் வார விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஷைன் அரிமா சங்கத் ... மேலும் பார்க்க