செய்திகள் :

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

post image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில், அருணகிரிநாதா் விழா நடத்தப்பட்டு வருகிறது. 75-ஆம் ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக, புகழ் பெற்ற 25 கலைஞா்கள் நாகசுரமும், 25 கலைஞா்கள் தவில் இசையும் வாசிக்க விழா தொடங்கியது.

தொடா்ந்து 4 நாள்கள் நடைபெறும் விழாவில் மங்கல வாத்திய இசை கச்சேரி, வாய்பாட்டு, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழா நடைபெறும் நான்கு நாள்களும் மலை மீது உள்ள முருகன் தங்கக்கவச உடையில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்ற நிா்வாகிகள் செந்தில்குமாா், கிருஷ்ணன், பொன்ராஜ், திருநாவுக்கரசு, பூபாலன் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ப... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அறந்தாங்கி அருகே திருநா... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் உலக தாய்ப்பால் வார விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஷைன் அரிமா சங்கத் ... மேலும் பார்க்க