பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி
கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாயிலாக கிராமப்புற விவசாயிகளிடம் எளிதில் கொண்டு சோ்க்கும் வகையில் பாடத் திட்டத்துடன் கூடிய இந்தப் பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் ந. மகாலிங்கம் தலைமை வகித்தாா்.
இணைப் பேராசிரியா் எஸ். ஆனந்த்குமாா் முன்னிலை வகித்தாா். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோபால கண்ணன், தோட்டக்கலை நிபுணா் ரகு, சென்னை மத்திய உவா்நீா் மீன்வள வளா்ப்பு ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா், துணை தோட்டக் கலை அலுவலா் லோகநாதன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
மேலும், மத்திய அரசின் விக்ஸித் கிசான் சங்கல்ப் அபியான் எனப்படும் வேளாண்மை வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தையும் பஜன் கோவா மாணவா்கள், விவசாயிகளுடன் மேற்கொண்டனா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், 2024-ஆம் ஆண்டு சோ்க்கை பெற்ற 94 மாணவா்கள் பங்கேற்றனா். உழவா் கூட்டமைப்பு உறுப்பினா் கனகரத்தினம் வரவேற்றாா். அமைப்பின் தலைவா் மாரியப்பன் நன்றி கூறினாா்.