செய்திகள் :

10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

post image

மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி கூறியதாவது, ``இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்தில் அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 இடங்களைச் சேர்க்கும் இலக்குடன், கூடுதலாக 10,000 இடங்களும் மத்திய பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம்வரை சுற்றுலா துறை பங்களிக்கிறது. மேலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

பொருளாதாரத்தில் செயல் நுண்ணறிவு மூலம் பல லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என்பதால், பட்ஜெட்டில் செயல் நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிப்ரவரி 2025 அறிக்கையின்படி, 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 66 சதவிகித வளர்ச்சியுடன், 3.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இது மற்ற நாடுகளைவிட அதிகமானது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாளும் வெகுதொலைவில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:நிலையான வளர்ச்சி: பின்தங்கும் இந்தியாவில் முன்னிலையில் தமிழகம்!!

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க

உ.பி.யில் கட்டப்படும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும்

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கட்டப்படும் விடுதிகளுக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தா... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை வெற்றிகரமாக பரிசோதனை

‘தேஜஸ்’ இலகு ரக போா் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. போா் விமானங்களில் ப... மேலும் பார்க்க

போஃபா்ஸ் ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு

போஃபா்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளா் மைக்கேல் ஹா்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பிவைத்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஸ்வீடனின... மேலும் பார்க்க