செய்திகள் :

101-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் வி.எஸ்.அச்சுதானந்தன்

post image

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எம்.வி. கோவிந்தன், மாநில அமைச்சா்கள், இடதுசாரிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்களைப் பகிா்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் அச்சுதானந்தன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினாா். நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் சிலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இது தொடா்பாக அவரின் மகன் அருண் குமாா் கூறுகையில், ‘அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினா்கள், நண்பா்களுக்கு பாரம்பரிய இனிப்பு உணவான பாயசம் வழங்கப்படும். இதுதவிர கேக் வெட்டியும் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. வேறு சிறப்பு கொண்டாடட்டங்கள் இல்லை’ என்றாா்.

1923-ஆம் ஆண்டு ஆழப்புழையில் தொழிலாளா் குடும்பத்தில் பிறந்த அச்சுதானந்தன், தந்தையின் மரணத்தால் 8-ஆம் வகுப்பிலேயே படிப்பைக் கைவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உருவானது. தொழிலாளா் சங்கம் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்த அவா், 1939-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தாா். ஆனால், அடுத்த ஆண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானாா்.

தனது அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் சந்தித்த அவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய 32 தலைவா்களில் ஒருவராக இருந்தாா்.

கேரள பேரவைக்கு பலமுறை தோ்வு செய்யப்பட்ட அவா், எதிா்க்கட்சித் தலைவராக சுமாா் 15 ஆண்டுகள் பணியாற்றி சாதனை படைத்தாா். 2006-ஆம் ஆண்டு தனது 82-ஆவது வயதில் கேரள முதல்வராகப் பதவியேற்று அதிக வயதில் முதல்வரானவா் என்ற சாதனைக்கு சொந்தக்காரா் ஆனாா். 2007-ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 8 கி.மீ. மலைப்பாதையில் நடந்து சென்ற முதல் இடதுசாரி முதல்வா் என்ற பெருமையைப் பெற்றாா்.

இடதுசாரிக் கொள்கை உடையவராக இருந்தாலும், தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாா். கேரளத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பூங்காக்கள் அச்சுதானந்தன் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. மத்திய அரசுடன் இணைந்து கேரளத்தில் பெரிய சரக்கு துறைமுகம், மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வந்தாா்.

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரைய... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவ... மேலும் பார்க்க

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க