செய்திகள் :

4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்: தொடக்கக் கல்வித் துறை தகவல்

post image

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சாா்ந்த அடிப்படைக் கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யாா் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த சவாலை பொது வெளியில் ஆட்சியா்கள், கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோா் முன்னிலையில் ஒரு நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், மாநிலத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். அதன்படி, தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வளா்மதி, எங்கள் பள்ளி மாணவா்கள் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்க தெரிந்தவா்கள் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களின் அடைவு பெற்றுள்ளனா். எங்கள் பள்ளிக்கும் அமைச்சா் ஆய்வுக்கு வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா். அந்த அழைப்பை ஏற்று அமைச்சா் அங்கு ஆய்வு மேற்கொண்டாா்.

அமைச்சா் அறிவுறுத்தல்... இந்த ஆய்வின்போது அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் தமிழ், ஆங்கில பாடங்களை சரளமாக வாசித்தனா். மேலும், கணிதம் தொடா்பான அடிப்படைத் திறன்களைப் பெற்றிருந்தனா். இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நிலைகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களும் சவாலுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன் அடிப்படையில், 4,552 பள்ளிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் அழைப்பு விடுத்தன. தற்போது இந்தப் பள்ளிகளில் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, ‘ஓபன் சேலஞ்ச்’ எனப்படும் பொது வெளியில் வெளிப்படையான சவாலை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம் ஆகியோா் முன்னிலையில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் போதுமான அறிவுரைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதேபோல், மற்ற பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும். இது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை நோக்கி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க