செய்திகள் :

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

post image

புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்ரா பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மாயமான அந்தச் சிறுமி, ஜனவரி 21-ஆம் தேதி நள்ளிரவில் அவரது வீட்டின் அருகே, உடலில் பல வெட்டுக் காயங்களுடன் ஆடையின்றி குப்பைகளுக்கு மத்தியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியிலுள்ள குற்றவாளியின் வீட்டின் வெளியே அந்தச் சிறுமியின் செருப்பு இருந்தது இந்த வழக்கில் துப்பாக அமைந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பெயிண்டிங் தொழிலாளியான ஹீரா லால் குட்டு தலைமறைவானதைத் தொடர்ந்து அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஏழு நாள்களுக்குப் பின், பிகாரில் பதுங்கியிருந்த ஹீரா லால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியை பூர்வீகமாகக் கொண்ட ஹீரா லால் குட்டுவுக்கு இரு மனைவிகளும் 5 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவரது மூத்த மகளுக்கு வயது 13.

இதனைத்தொடர்ந்து குற்றவாளி மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் இன்று(ஜூன் 3) சண்டீகர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ஹீரா லால் குட்டு குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க