செய்திகள் :

85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!

post image

இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும்பாலாக புரளியாகத்தான் இருக்கின்றன. இதுவரை 170-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் இன்று(அக். 24) வியாழக்கிழமை இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆகாசா ஏர் ஆகியவற்றின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனால், கடந்த 10 நாட்களில் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இந்த மிரட்டல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு புரளியால் சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். விமான நிறுவனங்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

ஏனெனில் ஒரு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் விமான சேவை பாதிப்பு, பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருதல் என ரூ. 3 கோடி செலவாகிறது. அதுமட்டுமன்றி விமானத்தில் செல்ல பயணிகள் மத்தியில் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வேலைக்காக நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொ... மேலும் பார்க்க

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, கடந்த 2022... மேலும் பார்க்க

அமராவதிக்கு ரயில் சேவை: ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு!

ஆந்திரத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் சேவைக்காக மத்திய அரசு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தலில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாடகர் அனுப் ஜலோடா கூறியுள்ளார். 1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் ... மேலும் பார்க்க