செய்திகள் :

Bhavatharini: `பவதாரிணி பிறந்தபோது முதன் முதலாகக் கொஞ்சிய அண்ணன் நான்...'-கண்கலங்கிய கார்த்திக் ராஜா

post image
இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.

பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது.

கார்த்திக் ராஜா, கங்கை அமரன், இளையராஜா

இதில் கண்கலங்கியபடி பேசியிருக்கும் கார்த்திக் ராஜா, "பவதாரிணி லீலாவதி ஹாஸ்பிட்டல்ல பிறந்தாள். அவள் பிறந்தவுடன் அவளை முதன் முதலாகக் கொஞ்சிய அண்ணன் நான். எப்போதும் யுவன் கூட கொஞ்சிக் கொஞ்சி விளையாடிட்டு இருப்பாள்.

அவள் இலங்கையில் காலமாகி, தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும்போது, இங்கிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் பவதாரிணிய அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மிகவும் வருத்தப்பட்டனர். அந்த அன்பை நான் எங்கும் பார்த்ததில்லை. தமிழ் மக்கள் மிகவும் தன்மையானவர்கள்.

கார்த்திக் ராஜா

இப்போது அவளின் பாடல்களை இந்த நிகழ்சியில் இசைக் கச்சேரியாக நடத்துகிறோம். அவளுக்கு இது போன்ற இசை நிகழ்ச்சிகள் ரொம்பப் பிடிக்கும். மேடையில் ரொம்பப் பதற்றத்துடனே இருப்பாள். பவதாரிணிக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசை. எனக்கு இயக்குநராக வேண்டும் என்று ஆசை. ஆனால், அம்மா பவதாரிணிக்கு நல்ல குரல் இருக்குனு, பாட வைச்சாங்க" என்று பேசியிருக்கிறார்.

`எகிப்த்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்தான்' - பி.ஆர்.பந்தலுவின் மகள்

பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1959-ல் வெளியான படம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'. சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.பெருமைமிக்க கிளாசிக்... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "முழு ஈடுபாடும் இசையின் மீதே..." - 109 படங்களின் பாடல்கள் உரிமை வழக்கில் இளையராஜா

தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜராகி ஒரு... மேலும் பார்க்க

Sethuraman: ``உன்னுடன் ஒன்றாக இருந்த அந்த அழகான 4 ஆண்டுகள்..'' -சேதுராமன் குறித்து மனைவி உருக்கம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘சக்கப் போடு போடு ராஜா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சேதுராமன். சரும மருத்துவப் படிப்பை முடித்த சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் ம... மேலும் பார்க்க

'மனம் கனந்து கிடக்கிறது'- மாரடைப்பால் இறந்த கலை இயக்குநருக்கு இரங்கல் தெரிவித்த வசந்த பாலன் !

‘குட்டி புலி’, ‘ஜெயில்’, ‘அநீதி’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்களில் கலை இயக்குநராகப் பணிப்புரிந்த சுரேஷ் கல்லேரி நேற்று (பிப்ரவரி13) மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். அவரின் மறைவிற்கு திரைதுறையைச் சேர்ந்த... மேலும் பார்க்க

Dragon: `அந்த பாட்டுல வர்ற மாதிரி என் காதலிகூட 18 நாடுகள் போயிருக்கேன்!' - சீக்ரெட்ஸ் சொல்லும் டீம்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.`லவ் டுடே' திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்... மேலும் பார்க்க

Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரபு உருக்கம்!

இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்ற... மேலும் பார்க்க