அரசு மருத்துவமனையில் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Career: தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்..!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு வெளியீடு.
என்ன வேலை?
பொது மத்திய சிவில் சேவை துறையில் 'பி' பிரிவு ஆராய்ச்சியாளர் பணி.
மொத்த காலி பணியிடங்கள்: 75
வயது வரம்பு: 30- வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.56,100 - 1,77,500
கல்வி தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, கணினி அறிவியல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங், கணிதம் ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எப்படி தேர்வு நடைபெறும்?
முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர், நேர்காணல் நடத்தப்படும்.
தேர்வு மையங்கள் எங்கெங்கே?
குவஹாத்தி, புது டெல்லி, பெங்களூரு, மும்பை, லக்நௌ, கொல்கத்தா
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 8, 2024
விண்ணப்பிக்கும் இணையதளம்:https://recruit-ndl.nielit.gov.in/
இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.