செய்திகள் :

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை, அதீத களைப்பு; வேலைதான் காரணமா?

post image

Doctor Vikatan: நீண்டகாலமாக வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நைட் ஷிஃப்ட் வேலைதான் கிடைத்திருக்கிறது.  ஒரு மாதமாக இந்த வேலையைப் பார்க்கிறேன். ஆனால், இதுவரை இல்லாத அளவு மிகவும் களைப்பாக உணர்கிறேன். பகலில் தூக்கமும் இல்லை. என்னுடைய திடீர் களைப்புக்கு என் நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும்.

எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம். அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது.

ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம்.

நம் எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். அதை 'எட்டு எட்டாக ' மூன்றாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரவில் 12 மணி நேரம் ஓய்வெடுக்கவும் பகலில் 12 மணி நேரம் வேலைசெய்யவும் ஏதுவாகத்தான் இயற்கையே நம் உடலை வடிவமைத்திருக்கிறது.

நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர் என்றால் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்களுக்கான பிரேக்ஃபாஸ்ட்.

நள்ளிரவு 12 மணிக்குச் சாப்பிடுவது லஞ்ச். காலையில் வீட்டுக்கு வரும்போது சாப்பிடுவது டின்னர். அதற்கடுத்த 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கானது. அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட வேண்டியதில்லை.

அதாவது நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், பகலை இரவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பலரும் பகலில் கிடைக்கிற நேரத்தை டி.வி பார்க்க, போன் பேச, வேறு வேலைகளைப் பார்க்கவெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.

இவர்கள் ஆரோக்கியத்தை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். போதுமான நேரம் தூங்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளவயதிலேயே நீரிழிவு  வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். 

6 முதல் 8 நேரத் தூக்கத்தில்தான் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும். உடல் ஓய்வெடுத்துக்கொள்ளும்.

அதீத களைப்பு: நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா?
அதீத களைப்பு: நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா?

பகலில் தூங்கும்போது உங்கள் அறை, இருட்டாகவும் சத்தங்கள் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பகல்தான் உங்களுக்கு இரவு என்பதால் பகலிலும் மீண்டும் சாப்பிடாதீர்கள். சரியாகத் தூங்காமலும் இரவில் மட்டுமன்றி பகலிலும் சாப்பிடுவதாலும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கத் தொடங்கிய மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் உங்கள் ஆரோக்கியம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடனடியாக உங்கள் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே உங்கள் பிரச்னைகள் தானாகச் சரியாகும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan: பொதுவாகவேஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில... மேலும் பார்க்க

சைனஸ் எப்போது ஆஸ்துமாவாக மாறலாம்? நிபுணர் விளக்கம்!

நவம்பர் மாதத்தில் இருந்தே குளிர்காலம் ஆரம்பித்துவிடும். இந்த காலகட்டத்தில்தான் சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு அது அதிகரிக்கும். இதற்கு லைஃப் ஸ்டைல் தீர்வுகள் என்னென்ன என்று சொல்கிறார் செங்கல்பட்டைச் சே... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு விடுமுறை, சமையல் அறைக்கு சீல்- நாமக்கல்லில் நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில், எக்ஸெல் எனும் தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தக் கல்வி வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சித்த மருத... மேலும் பார்க்க

Doctor Vikatan: பருக்களை விரட்டுமா பயத்த மாவும் கடலை மாவும்?

Doctor Vikatan: எனக்கு வயது 23. நினைவு தெரிந்த நாள் முதல் முகத்துக்கு சோப் உபயோகிப்பதில்லை. பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) அல்லது கடலை மாவு மட்டும்தான் பயன்படுத்துவேன். சமீப நாள்களாக எனக்கு முகத்தில் அள... மேலும் பார்க்க

நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனுமதி! - விவரம் என்ன?

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவியர்களில் சிலருக்கு வாந்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீ... மேலும் பார்க்க