மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
Rajasthan Royals: LSG-யிடம் 2 ரன்னில் தோற்றது மேட்ச் பிக்ஸிங்கா? - குற்றச்சாட்டும், RR விளக்கமும்!
சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகளைப் போல நடப்பு ஐ.பி.எல் சீசனில் மோசமாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் இணைந்திருக்கிறது. அதிலும், டெல்லி, லக்னோ அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு போட்டிகளில் கைமேல் இருந்த வெற்றியை எதிரணிக்கு ராஜஸ்தான் தாரை வார்த்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில், லக்னோவிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மேட்ச் ஃபிக்ஸிங்காக இருக்கலாம் என்று, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தற்காலிக குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் பிஹானி சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.
இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து, ஜெய்தீப் பிஹானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை செயலாளரிடம் முறையாகப் புகார் அளித்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், "தற்காலிகக் குழுவின் ஒருங்கிணைப்பாளரால் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற பொது அறிக்கைகள் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் மல்டி ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RMPL), ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில், பி.சி.சி.ஐ ஆகியவற்றின் நற்பெயர், நம்பகத்தன்மை மீது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை, கிரிக்கெட்டின் நேர்மையையும் கெடுக்கின்றன" என்று தெரிவித்திருக்கிறது.

லக்னோ அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ராஜஸ்தான் கையில் 6 விக்கெட்டுகள் இருந்தது. இருப்பினும், ஆவேஷ் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.