செய்திகள் :

Shivam Dube: `கஷ்டப்படுற காலத்துல ஒவ்வொரு பைசாவும் ரொம்ப முக்கியம்'- இளம் வீரர்களுக்கு துபே அறிவுரை!

post image

'உதவித்தொகை வழஙகும் நிகழ்வு!"

'கஷ்டப்படுற காலத்துல நமக்கு கிடைக்குற ஒவ்வொரு பைசாவும் மதிப்புமிக்கது.' என தனது சிறுவயதை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் சென்னை அணியின் வீரர் சிவம் துபே.

சிவம் துபே
சிவம் துபே

'நிகழ்வின் பின்னணி!'

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கத் தொடங்கியிருக்கும் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த இளம் திறமையாளர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா 30,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சென்னை அணியின் வீரர் சிவம் துபே, சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

'சிவம் துபே அறிவுரை!'

இதில் பேசிய சென்னை அணியின் வீரர் சிவம் துபே, 'வேறு மாநிலங்களில் இந்த மாதிரியான முன்னெடுப்புகளை எடுக்கிறார்களா என தெரியவில்லை. நான் மும்பைக்கு சென்று இதைப் பற்றி சொல்லி அங்கிருப்பவர்களையும் இதைப் போன்று செய்ய சொல்வேன்.

Shivam Dube
Shivam Dube

ஒரு வீரருக்கு 30,000 ரூபாயை உதவித்தொகையாக கொடுக்கிறார்கள். இது சிறிய தொகையாக தெரியலாம். ஆனால், நாம் கஷ்டப்படுகிற காலத்தில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் மதிப்புமிக்கதுதான். ஒரு காலத்தில் 30,000 ரூபாய் எனக்குமே பெரிய தொகையாக இருந்திருக்கிறது.

நானும் ஆசியப்போட்டியில் கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடுவது கொஞ்சம் வித்தியாசமான பெருமைமிக்க உணர்வாக இருக்கும். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் சர்வதேச தொடர்களில் தங்கங்களை வென்று வர வேண்டும்.' என பேசியிருந்தார்.

Shivam Dube
Shivam Dube

மேலும், ஒவ்வொரு வீரர் வீராங்கனைக்கும் தலா 70,000 ரூபாயை தாம் ஊக்கத்தொகையாக வழங்குவதாக நிகழ்விலேயே அறிவிக்கவும் செய்தார்.

சென்னை அணியின் சிஇஓ காசி பேசுகையில், 'சென்னையின் செயல்பாடு உங்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம். வரும் நாட்களில் எங்கள் அணி சிறப்பாக ஆடும். 2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால், கடைசியில் எல்லா போட்டிகளையும் வென்று சாம்பியனானோம். அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் அணி சிறப்பாக ஆட கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.' என்றார்.

Gujarat Titans : ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர்; முதுகெலும்பாக தமிழக வீரர்கள்!'- குஜராத் எப்படி சாதித்தது?

'குஜராத் தொடர் வெற்றி!'ஈடன் கார்டனில் வைத்து கொல்கத்தாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது குஜராத் அணி. நடப்பு சீசனில் அந்த அணி பெறும் 6 வது வெற்றி இது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் த... மேலும் பார்க்க

MI vs CSK: "ஜடேஜாவை டாப் ஆர்டருக்கு மாற்ற இதான் காரணம்!" - ஸ்டீபன் ப்ளெம்மிங் சொல்வது என்ன?

'மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் இன்று நடக்கவிருக்கிறது. இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் ஆடியிருக்கின்றன... மேலும் பார்க்க

RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ் கானால் வென்ற லக்னோ!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களம் கண்டன. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்... மேலும் பார்க்க

Avesh Khan : 'நான் ஒன்றும் ஸ்டார்க் இல்லை... ஆனாலும்!' - திரில்லிங் கடைசி ஓவர் பற்றி ஆவேஷ் கான்!

'லக்னோ திரில் வெற்றி!'ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்கள் வித... மேலும் பார்க்க