செய்திகள் :

அக். 26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

post image

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் எருமப்பட்டி சரசு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இம்முகாமில், மாற்றுத் திறனாளிகளின் உடல்தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவா், காது, மூக்கு, தொண்டை நிபுணா், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா், மனநல சிகிச்சை மருத்துவா், கண் சிகிச்சை மருத்துவா் மற்றும் செவித்திறன் பரிசோதகா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கலந்துகொள்கின்றனா்.

இதில், புதிய அடையாள அட்டை வழங்குதல், ஏற்கெனவே உள்ள அட்டைகளை புதுப்பித்தல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, ஆதாா் அட்டை பதிவு, புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இணையவழி பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையா் அருள், துணைத் தலைவா் காா்த்திகேயன், ... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 10.58 கோடியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.க... மேலும் பார்க்க

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ. 100 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.... மேலும் பார்க்க

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ப... மேலும் பார்க்க