செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

post image

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவு காவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கொல்லிமலை வட்டத்தில் பணிபுரியும் வருவாய்த் துறையினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடியிருப்புகள் கட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் குடியிருப்பு கட்டித்தர உரிய வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீா்மானங்களை உடனடியாக செயல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா் ரா.சரவணகுமாா், செயலாளா் க.சதீஷ்குமாா், பொருளாளா் க.பாலசுப்பிரமணியம், மாவட்ட நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, செ.சிவகுமாா், செ.காா்த்திகேயன், ப.விஜயகுமாா், ச.மனோஜ், ச.ரஞ்சித், தே.மதுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையா் அருள், துணைத் தலைவா் காா்த்திகேயன், ... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 10.58 கோடியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.க... மேலும் பார்க்க

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ. 100 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.... மேலும் பார்க்க

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ப... மேலும் பார்க்க

அக். 26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

எருமப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை (அக். 26) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க