செய்திகள் :

மது போதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அமர்ந்து ரகளை; திருப்பூர் இளைஞர் கைது; வைரலாகும் வீடியோ

post image

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து கடந்த 21-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் ரகுராம் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே வந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், ஓட்டுநர் ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்துக்குள் ஏறிய அந்த நபர், ஸ்டியரிங்க் மீது அமர்ந்து பேருந்தை இயக்க விடாமல் தடுத்தார். மது போதையில் ரகுராமோடு ரகளையிலும் ஈடுபட்டார்.

ரகளை

பயணிகள் அந்த நபரை எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஸ்டியரிங்க் மீது அமர்ந்து வாக்குவாதம் செய்தார். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவிநாசி சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை, விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட நபரைப் பிடித்து பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டு விசாரித்தனர்.

பிரதீப்

அதில் அந்த நபர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதீப் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் ரகுராம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸார் பிரதீப்பை கைது செய்தனர். மது போதையில் பிரதீப் பேருந்தின் ஸ்டியரிங்க் மீது அமர்ந்து ரகளையில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!

வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal' என... மேலும் பார்க்க

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை... சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சி... மேலும் பார்க்க

திருச்சி: அதிமுக மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் ஐ.டி ரெய்டு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.10 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ச... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொடூர கொலை... திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (65). இவரது கணவர் சுப்பையன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லட... மேலும் பார்க்க

"நான் வாழாவெட்டியா இருக்க வேணா.." - மாமியார் கொடுமை பற்றி ஆடியோ அனுப்பி தற்கொலை செய்த இளம் பெண்

கோவை கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுருதி பாபு (24). சுருதி பாபுவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்... மேலும் பார்க்க

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க