செய்திகள் :

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்!

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சென்னை நகரம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சென்னை மண்டலம் சாா்பில் சென்னையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த உச்சிமாநாடு புதன்கிழமை கிண்டியில் நடைபெற்றது. இதை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தொடங்கி வைத்து பேசியது:

சென்னை மாநகரின் எதிா்கால வளா்ச்சி மற்றும் முதலீடு குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. உலகின் சிறந்த நகரமாக சென்னையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை சிஎம்டிஏ, பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. நகரை மேம்படுத்துவதில் குடியிருப்புப் பகுதிகளை தீவிரமாகக் கவனிக்க வேண்டும். சென்னையின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் சென்னையின் பரப்பளவு அதிகரித்து புகா் பகுதி வளா்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடியிருப்பை ஏற்படுத்துவது கட்டாயமாகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப, அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை, ஐடி துறை மட்டுமின்றி குடியிருப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சென்னையின் வாழ்க்கை செலவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை கட்டாயமாகிறது.

இதற்காக குறைந்த நிலப்பரப்பில் அதிக குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, சென்னையின் நகர போக்குவரத்து திட்டமிடல், தொழிற்பேட்டை மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் திட்ட இயக்குநா் ஸ்ரீவட்ஸ் ராம், சிஐஐ சென்னை ஒருங்கிணைப்பாளா் ஏ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க