செய்திகள் :

அதிமுக: செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

post image

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று ( நவ. 1) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நடத்திக் கொடுத்தமைக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அந்தப் பாராட்டு விழாவில் நான் பங்கேற்றேன். செங்கோட்டையன் பங்கேற்காமல் தவறான கருத்து கூறினார்.

கடந்த 6 மாத காலமாகவே கட்சிக்கு எதிராக இருந்தார் செங்கோட்டையன். திமுகவின் B டீமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செங்கோட்டையன் குறிப்பிடுபவர்கள் எல்லாம் பிரிந்துசென்றவர்கள் அல்ல. நீக்கப்பட்டவர்கள்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கட்சிக்குத் துரோகம் செய்தால் இதுதான் நிலைமை.

அதிமுக பொதுக்குழு முடிவே இறுதியானது. செங்கோட்டையன் திமுகவைப் பற்றி சட்டப்பேரவையில் பேசியதே இல்லை. கட்சிக் கூட்டங்களிலும் எதிர்த்துப் பேசியதில்லை.

ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் பதவியும் மாவட்டச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டன.

அவரை அமைச்சராக்கியது நான். நான் பொறுப்பேற்றபோதுதான், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கினேன்.

அதிமுக தலைமைக்கு விரோதமாகச் செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா?

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி
செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் இவர்களின் திட்டம்.

இந்த இயக்கத்தை யார் பலவீனப்படுத்த நினைத்தாலும், கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது" என்று கூறியிருக்கிறார்.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க