செய்திகள் :

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

post image

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் இன்று (அக்டோபர் 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள், சாய் ஹோப் 26 ரன்கள், கேப்டன் ராஸ்டன் சேஸ் 24 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் உடன் இணைந்து பும்ரா பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சாதனையை இருவரும் 24 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளனர்.

பந்துகள் அடிப்படையில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா தன்வசப்படுத்தியுள்ளார். அவர் 1747 பந்துகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian fast bowler Jasprit Bumrah has set a new record in Test matches.

இதையும் படிக்க: ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை! - இந்திய முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியில் 80 - 90 காலகட்டத்தில் இருந்த வீரர்களைப் போன்று திறமையான வீரர்கள் தற்போது இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்கக்... மேலும் பார்க்க

ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விலைபோகாத (unsold) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் தொடரில் முழுமையாக பங்கேற்க முடிவெடுத்து... மேலும் பார்க்க

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

அகமதாபாத் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மே... மேலும் பார்க்க

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் உதவியால் ரன்கள் குவித்தேன்: ஷுப்மன் கில்

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் உதவினார்கள் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ... மேலும் பார்க்க