செய்திகள் :

பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை! - இந்திய முன்னாள் கேப்டன்

post image

பாகிஸ்தான் அணியில் 80 - 90 காலகட்டத்தில் இருந்த வீரர்களைப் போன்று திறமையான வீரர்கள் தற்போது இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது; விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9-வது முறையாகக் கோப்பையை வென்றது.

இந்தத் தொடரில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்குவதைத் தவிர்த்தனர்.

மேலும், ஆசிய கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை - விளையாட்டுத் துறை அமைச்சர் மோஷின் நக்வியின் கைகளில் இருந்து கோப்பையைப் பெறுவதை மறுத்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் சாஹிப்ஸாதா உள்ளிட்டோரும் விமான விபத்து, துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், “நான் சொல்ல வருவது என்னவென்றால், உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அனைத்து ஊடகங்களும் பொறுப்பு இருக்கிறது. கிரிக்கெட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல் நோக்கத்தோடு பார்க்கக் கூடாது.

அனைத்து ஊடகங்களும் அனைத்து விஷயங்களையும் வெளியே கொண்டுவருவது அவர்கள் கடமை. ஆனால், விளையாட்டு வீரராக நான் விளையாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

80, 90 களில் இருந்த திறமை தற்போதுள்ள பாகிஸ்தான் வீரர்களிடம் இல்லை. அப்போதெல்லாம், பாகிஸ்தான் அணியில் மிகவும் திறமையான வீரர்கள் இருந்தனர். இம்ரான் கான், ஜாவேத் மியாண்டாட், ஜாகீர் அப்பாஸ், வாஷிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் உள்ளிட்டோரும் மிகவும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அந்தத் திறமையை காண்பித்துள்ளனர். ஆனால், அதுபோன்ற திறமையைத் தற்போதைய பாகிஸ்தான் அணியில் காணமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

Stick to sports: Kapil Dev opens up on India-Pakistan controversy in Asia Cup

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவ... மேலும் பார்க்க

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விலைபோகாத (unsold) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் தொடரில் முழுமையாக பங்கேற்க முடிவெடுத்து... மேலும் பார்க்க

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

அகமதாபாத் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மே... மேலும் பார்க்க

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் உதவியால் ரன்கள் குவித்தேன்: ஷுப்மன் கில்

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் உதவினார்கள் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ... மேலும் பார்க்க