செய்திகள் :

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று (அக். 2) ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 103 மாவோயிஸ்டுகள், சத்தீஸ்கர் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படை அதிகாரிகளின் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சரணடைந்துள்ள 103 பேரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், ஏற்கெனவே 49 பேரை பிடிக்க பாதுகாப்புப் படையினர், கூட்டாக ரூ1.6 கோடி வெகுமதி அறிவித்து தேடி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அப்பகுதிகளில் செயல்பட்ட மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்காக அவர்களிடம் தலா ரூ.50,000 மதிப்புள்ள காசோலைகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல், பிஜப்பூர் மாவட்டத்தில் 421 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 410 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளில் 137 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

In Chhattisgarh state, 103 Maoists surrendered to security forces in a single day today (Oct. 2).

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, அடுத்த வாரம் இந்தியா வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேற... மேலும் பார்க்க

அக்.26 முதல்..! 5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளாக நீடித்த பதற்றங்களுக்குப் பின்னர் முதல் முறையாக வருகிற 26 ஆம் தேதி நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.சீன... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது மேலாளர் மற்றும் விழா ஏற்பாட்டாளர் மீது அசாம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல அசாமிய ப... மேலும் பார்க்க

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

ஜனநாயகம் மீதான தாக்குதல் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கொலம்பியாவில்... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டு நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்... மேலும் பார்க்க

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களி... மேலும் பார்க்க