செய்திகள் :

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

post image

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, அடுத்த வாரம் இந்தியா வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியது முதல் தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகின்றது. தலிபான் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி, வரும் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்படாததினால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவுக்கும் தலிபான் அரசுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள ஆப்கன் தூதரகங்களை தலிபான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

இத்துடன், கடந்த செப்டம்பர் மாதம் தலிபான் அரசின் மருத்துவம் மற்றும் உணவுத் துறையின் இணையமைச்சர் ஹம்துல்லா சாஹித் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

Reports have emerged that Amir Khan Muttaqi, the Foreign Minister of the Afghan Taliban government, will be visiting India next week.

அக்.26 முதல்..! 5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளாக நீடித்த பதற்றங்களுக்குப் பின்னர் முதல் முறையாக வருகிற 26 ஆம் தேதி நேரடி விமான சேவை துவங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.சீன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று (அக். 2) ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 103 மாவோயிஸ்டுகள், சத்தீஸ்கர் கா... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது மேலாளர் மற்றும் விழா ஏற்பாட்டாளர் மீது அசாம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல அசாமிய ப... மேலும் பார்க்க

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

ஜனநாயகம் மீதான தாக்குதல் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கொலம்பியாவில்... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டு நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்... மேலும் பார்க்க

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களி... மேலும் பார்க்க