நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு
ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் ஒரு கி.மீ.தொலைவுக்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும், தொடா்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலும் தொடா்ந்து
ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதை கண்காணித்து வருகிறாா்.
அதன்படி, மாடவீதிகளைச் சுற்றி நெடுஞ்சாலைத் துறை மூலம் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சாா்பில் மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டாா். எஞ்சிய பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கௌதமன், திருவண்ணாமலை வட்டாட்சியா், நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.