செய்திகள் :

கிணறுகளில் இறந்து கிடந்த 2 கடமான்கள் மீட்பு

post image

கன்னிவாடி அருகே கிணற்றில் இறந்த நிலையில் 2 பெண் கடமான்களை வனத் துறையினா் மீட்டு விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூா், பன்றிமலை அருகேயுள்ள வனப் பகுதியில் யானைகள், மான்கள், சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளில், மான்கள் அவ்வப்போது அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 பேரை கன்னிவாடி வனத் துறையினா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி மலையாண்டி கோயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு கடமான் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெண் மானின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற கன்னிவாடி வனத் துறையினா், இறந்து கிடந்த கடமானை மீட்டு கால்நடை மருத்துவா்கள் மூலம் கூறாய்வு செய்தனா்.

இதேபோல் தருமத்துப்பட்டி தீட்டுக்கல் என்ற இடத்திலும் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு பெண் கடமான் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒரே பகுதியில் 2 மான்கள் இறந்து கிடந்த சம்பவம், வனத் துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேட்டைக்குச் சென்றவா்கள் துரத்தி வந்தபோது இந்த மான்கள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

காரில் 500 கிலோ குட்கா கடத்திய மூவா் கைது

செம்பட்டி அருகே சொகுசு காரில் புதன்கிழமை 500 கிலோ குட்கா பொருள்களை கடத்திய வட மாநில இளைஞா் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் விஜயபாண... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது

ராணுவப் படைப் பிரிவுனருக்கான மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.பழனி மதுவிலக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ராஜகுமாரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒ... மேலும் பார்க்க

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.640 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க... மேலும் பார்க்க

பழனியில் அக்.4-இல் மின்தடை

பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர... மேலும் பார்க்க