ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.