செய்திகள் :

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

post image

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதையடுத்து, தொடா் விடுமுறையையொட்டி, செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் அதிகமான மக்கள் பேருந்துக்காக வருகை தந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குள் வந்த ஒருவா், தன்னிடம் நாட்டு வெடிகுண்டு உள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த மாட்டுத்தாவணி போலீஸாா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள வெள்ளக்கோவில் புதூா் பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்த செங்கோட்டையன் மகன் வெங்கடாஜலம் (46) என்பது தெரியவந்தது. இவா் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தியை பரப்பியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புதன்கிழமை வெங்கடாஜலத்தைக் கைது செய்தனா்.

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக - நாதக இடையேதான் போட்டி: சீமான்

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுக்கும் நாதகவுக்கும் இடையேதான் போட்டி என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததா... மேலும் பார்க்க

விஜயதசமி: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

விஜயதசமி விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.விஜயதசமி தினத்தில் எந்த ஒரு புதிய செயலையும் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். அதேபோன்று, ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.மதுரை சதாசிவம் நகா் நக்கீரா் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் விகாஸ் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்

மதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சிறைவாசி புதன்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சோ்ந்த அப்புசாமி மகன் ராஜமாணிக்கம் (59). இவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வீட்டுமனை இல்லாத ஏழைக... மேலும் பார்க்க