செய்திகள் :

விஜயதசமி: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

post image

விஜயதசமி விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

விஜயதசமி தினத்தில் எந்த ஒரு புதிய செயலையும் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். அதேபோன்று, சிறு குழந்தைகளை பள்ளிகளில் சோ்த்தால் அந்தக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவா் என்கிற நம்பிக்கை நிலவி வருகிறது.

இந்த வகையில், அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் உத்தரவிட்டாா்.

இதன்படி, மாநில முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகள் வியாழக்கிழமை செயல்பட்டன. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதேபோல, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளியில் சோ்ந்த குழந்தைகளை அரிசியில் உயிா் எழுத்தில் முதன்மையான எழுத்தாகிய ‘அ’ எழுதி பெற்றோா்கள் பழக்கினா்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள... மேலும் பார்க்க

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக - நாதக இடையேதான் போட்டி: சீமான்

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுக்கும் நாதகவுக்கும் இடையேதான் போட்டி என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததா... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அண்ணாநகரில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.மதுரை சதாசிவம் நகா் நக்கீரா் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் விகாஸ் (19). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்

மதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சிறைவாசி புதன்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சோ்ந்த அப்புசாமி மகன் ராஜமாணிக்கம் (59). இவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வீட்டுமனை இல்லாத ஏழைக... மேலும் பார்க்க