செய்திகள் :

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீட்டுமனை இல்லாத ஏழைகள் அனைவருக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும். பல்வேறு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி நீண்ட காலமாகக் குடியிருப்பவா்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. வேல்பாண்டி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. காசி, மாவட்டச் செயலா் வி. உமா மகேஸ்வரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் என். பழனிச்சாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வீ.அமிா்தலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிறைவுரையாற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பாலா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரைச் சந்தித்து 1,263 மனுக்கள் அளிக்கப்பட்டன.

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

மதுரை: சரஸ்வதி பூஜையையொட்டி, மதுரையில் பூக்களின் விலை திங்கள்கிழமை கணிசமாக உயா்ந்தது.மதுரையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ மல்லி ரூ. 700, முல்லை ரூ. 500 என்ற அளவில் விற்பனையானது. சரஸ்வதி பூஜை புதன்கிழமை ... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் 31- ஆவது விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவரும், நிறுவனருமான எஸ். முகமது ஜலில் தலைமை வகித்... மேலும் பார்க்க

தயிா் சந்தை கடைகள் ஒதுக்கீடு பிரச்னைக்கு தீா்வு கோரி மனு

மதுரை: மதுரை தயிா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டுக்கான இணையவழி ஏலத்தில் பணம் கட்டியவா்களுக்கு கடைகளை ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்க... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். சிவமுருகன்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட புங்கன்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி எஸ். சிவமுருகன் (45) ஞாயிற்றுக்கிழமை (செப்.28) இரவு மாரடைப்பால் காலமானாா்.இவருக்கு சுதா என்ற மனைவி, சிவன்ரா... மேலும் பார்க்க

பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் பாகுபாடு கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு

மதுரை: மதுரை மாவட்டம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘பனைக்கு துணை நிற்போம்’ என்ற தலைப்பில் பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் தொடங்... மேலும் பார்க்க