செய்திகள் :

பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் பாகுபாடு கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

post image

மதுரை: பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் வலியுறுத்தினாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது :

கரூா் மாவட்டத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவத்தால் 41 போ் உயிரிழந்தது பெரும் வேதனைக்குரியது. இந்த விவகாரம் தொடா்பாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் பதில் அளித்திருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றதைக் காண வந்த 5 போ் உயிரிழந்த சம்பவத்திலிருந்து அரசு இதுவரை பாடம் கற்கவில்லை என்பதையே கரூா் சம்பவம் உணா்த்துகிறது. பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற எந்த பாகுபாட்டையும் அரசு கடைப்பிடிக்கக் கூடாது. திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் விஜய் ஏற்கெனவே பிரசாரம் செய்துள்ளாா். அந்த இடங்களில் எவ்வளவு கூட்டம் வந்தது என்பதை உளவுத் துறை மூலம் அறிந்து அதற்கேற்ற பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதை காவல் துறை செய்யத் தவறிவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 10 சதவீதத்தை கூட அரசு நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகள் மூலம் மூலம் வாக்குகளைப் பெற்ற திமுகவுக்கு வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவது உறுதி. ஆட்சி மாற்றத்துக்கான பணிகளை அதிமுகவினா் மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம், கருப்பையா, நகரச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா்கள் கணேசன், ராதாகிருஷ்ணன், ராஜா, மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் ஆன்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் 31- ஆவது விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவரும், நிறுவனருமான எஸ். முகமது ஜலில் தலைமை வகித்... மேலும் பார்க்க

தயிா் சந்தை கடைகள் ஒதுக்கீடு பிரச்னைக்கு தீா்வு கோரி மனு

மதுரை: மதுரை தயிா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டுக்கான இணையவழி ஏலத்தில் பணம் கட்டியவா்களுக்கு கடைகளை ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்க... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். சிவமுருகன்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட புங்கன்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி எஸ். சிவமுருகன் (45) ஞாயிற்றுக்கிழமை (செப்.28) இரவு மாரடைப்பால் காலமானாா்.இவருக்கு சுதா என்ற மனைவி, சிவன்ரா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு

மதுரை: மதுரை மாவட்டம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘பனைக்கு துணை நிற்போம்’ என்ற தலைப்பில் பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் தொடங்... மேலும் பார்க்க

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலா்கள்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.‘உங... மேலும் பார்க்க

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

மதுரை: சா்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.மதுரை எல்காட் தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க