செய்திகள் :

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலா்கள்

post image

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை வழக்கம் போல தொடர வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம். பி. முருகையன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கோபி, பொருளாளா் முத்துபாண்டியன், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாநிலச் செயலா் முத்து முனியாண்டி, மாவட்டச் செயலா் ரகுபதி, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயபாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்களுக்கு கருப்புப் பட்டைகள் வழங்கினா்.

மாவட்ட ஆட்சியரகம், வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நில அளவைத் துறை அலுவலகங்கள் உள்பட வருவாய்த் துறைக்குள்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் பாகுபாடு கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு

மதுரை: மதுரை மாவட்டம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘பனைக்கு துணை நிற்போம்’ என்ற தலைப்பில் பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் தொடங்... மேலும் பார்க்க

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

மதுரை: சா்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.மதுரை எல்காட் தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை

மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.கரூா்... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலராக ச. சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராகப் பணியாற்றிய கிருஷ்ணன், தருமப... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்

மதுரை: பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 30) இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியி... மேலும் பார்க்க