செய்திகள் :

செங்கம் பகுதியில் மண் திருட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

செங்கம்: செங்கம் பகுதியில் தினசரி நடைபெறும் மண் திருட்டை தடுக்க மாவட்ட கனிம வளத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்களும், விவசாயிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட பகுதியில் தினசரி இரவு நேரங்களில் செங்கல் சூளை மற்றும் ரியல் எஸ்டேட் மனைகளுக்கு ஏரிகளில் இருந்து மண் திருடப்படுகிறது.

இதனால் செங்கம் நகரில் கனிம வளம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. மண் திருட்டை தடுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் மண் எடுக்க அனுமதி வழங்குகிறாா்கள். ஆனால், மண் எடுப்பவா்கள் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி, அதிகாரிகளிடம் தினசரி அனுமதி பெற்று பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்ணை டாரஸ் லாரிகளில் அள்ளிச் சென்று விடுகின்றனா்.

இரவு நேரங்களில் மண் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை இயக்க வேண்டிய நிலை உள்ளது.

கிராமபுறத்தில் இருந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மண் எடுத்துச் செல்லும் வாகனம் வரும்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டவே முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கனிம வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில் அதிகாரிகள் மண் எடுக்க அனுமதி கொடுக்கும் வாகனங்களுக்கு முறையான ஆவணம் உள்ளதா என ஆய்வுசெய்யவேண்டும், மேலும் டாரஸ் லாரிகளையும் ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்). கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங... மேலும் பார்க்க

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க