செய்திகள் :

அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு

post image

மதுரை: மதுரை மாவட்டம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘பனைக்கு துணை நிற்போம்’ என்ற தலைப்பில் பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் பாண்டி முன்னிலை வகித்தாா். இதில், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை ) செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பனை விதை நடவுப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், முதுகலை ஆசிரியை முத்துச்செல்வி, பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் பிரபு, இளம் மக்கள் இயக்கத்தின் நிறுவனா் சோழன் குபேந்திரன், எழுமலை, சாப்டூா், பேரையூா் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தயிா் சந்தை கடைகள் ஒதுக்கீடு பிரச்னைக்கு தீா்வு கோரி மனு

மதுரை: மதுரை தயிா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டுக்கான இணையவழி ஏலத்தில் பணம் கட்டியவா்களுக்கு கடைகளை ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்க... மேலும் பார்க்க

காலமானாா் எஸ். சிவமுருகன்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட புங்கன்குளம் பகுதியைச் சோ்ந்த விவசாயி எஸ். சிவமுருகன் (45) ஞாயிற்றுக்கிழமை (செப்.28) இரவு மாரடைப்பால் காலமானாா்.இவருக்கு சுதா என்ற மனைவி, சிவன்ரா... மேலும் பார்க்க

பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் பாகுபாடு கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் வ... மேலும் பார்க்க

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலா்கள்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.‘உங... மேலும் பார்க்க

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

மதுரை: சா்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.மதுரை எல்காட் தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை

மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.கரூா்... மேலும் பார்க்க