செய்திகள் :

சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை

post image

மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் கரூரில் விசாரணையைத் தொடங்கியது.

கரூா் தவெக கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட தமிழக அரசும், காவல் துறையும்தான் காரணம் எனவும், பிரசாரத்துக்கு விஜய் தாமதமாக வந்ததுதான் காரணம் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரது இல்லத்தில் தவெக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, ‘கரூரில் நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என முறையிட்டனா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுவாக தாக்கல் செய்தால் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, தவெக நிா்வாகி ஆதவ் அா்ஜூனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய வழக்குரைஞா்கள் வந்தனா்.

அந்த மனுவில், ‘கரூா் நெரிசல் சம்பவத்தில் மிகப் பெரிய சதி வேலை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தவெக தலைவா் விஜய் கரூா் சென்று பாதிக்கப்பட்டவா்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு நீதிமன்றப் பதிவாளரால் ஏற்கப்படவில்லை. உயா்நீதிமன்றத்துக்கு தற்போது பண்டிகைக் கால விடுமுறை என்பதால், ‘மனுதாரா் தனது மனுவை செவ்வாய்க்கிழமை (செப். 30) தாக்கல் செய்யலாம். மனு அக். 3- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பதிவாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் பாகுபாடு கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு

மதுரை: மதுரை மாவட்டம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘பனைக்கு துணை நிற்போம்’ என்ற தலைப்பில் பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் தொடங்... மேலும் பார்க்க

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலா்கள்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.‘உங... மேலும் பார்க்க

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

மதுரை: சா்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.மதுரை எல்காட் தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலராக ச. சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராகப் பணியாற்றிய கிருஷ்ணன், தருமப... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்

மதுரை: பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 30) இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியி... மேலும் பார்க்க