செய்திகள் :

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

post image

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இதில் கரூா், கண்ணூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் படுகாயமடைந்த நிலையில், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் பேசும்போது, தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மனோஜ்குமாா் படுகாயமடைந்துள்ளாா். கரூரில் இருந்து உயா் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்ட அவருக்கு முதலில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

24 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளது. இதையடுத்து அவா் தாமாகவே சுவாசிக்கத் தொடங்கியுள்ளாா். இதையடுத்து அவா் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளாா். அவா் விரைவில் வீடு திரும்புவாா். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யும்படி மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பீளமேட்டை அடுத்த விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரைச் சோ்ந்தவா் முரளித... மேலும் பார்க்க