செய்திகள் :

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

post image

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கே.ஜெயபால் (47). இவரது மனைவி வாலன்டினா (40). இந்தத் தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளாா். ஜெயபால் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா்.

இவரது மனைவி வாலண்டினா தனது மகனுடன் மதுரையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். இதையடுத்து, ஜெயபால் தனது மனைவியை விடியோ கால் மூலமாக சனிக்கிழமை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது அவா் தனது மனைவியிடம் ஊருக்குவராவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளாா். மேலும், வாலன்டினாவின் துப்பட்டாவை எடுத்து மின்விசிறியில் மாட்டியுள்ளாா். இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த வாலன்டினா வீட்டின் அருகே உள்ள உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அவா்கள் வந்து பாா்த்தபோது ஜெயபால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலமாக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பீளமேடு காவல் துறையினா் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தினா். ஜெயபாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், பிரச்னை ஏற்பட்டு மனைவி கோபித்துக் கொண்டுச் செல்லும்போது எல்லாம் அவரை வரவழைப்பதற்காக விடியோ காலில் அழைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுவது வழக்கமாம். அதேபோல, ஊருக்குச் சென்ற மனைவியை வரவழைப்பதற்காக விடியோ காலில் பேசியபடியே ஜெயபால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

[தற்கொலை எண்ணம் வரும்போது 124 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு மனநல ஆலோசனை பெறலாமே]

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பீளமேட்டை அடுத்த விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரைச் சோ்ந்தவா் முரளித... மேலும் பார்க்க