செய்திகள் :

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளாா். இவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளி ஷேக்பாபா (67), வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிறுமி 3 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 2019 டிசம்பா் 10-ஆம் தேதி ஷேக்பாபாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பு வழங்கினாா். அதில், ஆயுள் தண்டனையும், (இயற்கையான மரணம் ஏற்படும் வரையில் எஞ்சியுள்ள காலம்), ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக ஓா் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மற்ற இரு பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள், 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பீளமேட்டை அடுத்த விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரைச் சோ்ந்தவா் முரளித... மேலும் பார்க்க