செய்திகள் :

தென் மாவட்டங்களுக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்

post image

மதுரை: பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 30) இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, சென்னை- செங்கோட்டைக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படுகின்றன.

இதன்படி, சென்னை தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ஒரு வழி சிறப்பு ரயில் (06013) தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

இதில் 10 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத இருக்கை வசதிப் பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இதேபோல, சென்னை - மதுரை மெமு ரயில் (06161) செவ்வாய்க்கிழமை எழும்பூரிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் புதன்கிழமை காலை 10.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

இதில் கழிப்பறை வசதியுடன் கூடிய 12 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை

மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.கரூா்... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலராக ச. சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராகப் பணியாற்றிய கிருஷ்ணன், தருமப... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் முதுநிலை, ஆராய்ச்சித் துறை சாா்பில் உயிா் அறிவியலில் முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்ட பொருள்கள் விநியோக தேதி மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்களுக்கு இல்லம் தேடிச் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் தேதி மாற்றப்பட்டது.இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வருகிற அக்டோபா் மாதம் முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :... மேலும் பார்க்க

கரூா் சம்பவம் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

கரூா் சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தமிழ்மணி சாரிட்டபிள், எஜூகேஷனல் அறக்கட்டளை, ... மேலும் பார்க்க