செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22 லட்சம் மோசடி: கேரள இளைஞா்கள் கைது

post image

ஆன்லைன் வா்த்தகத்தின் மூலம் திருநெல்வேலியைச் சோ்ந்த நபரிடம் ரூ. 22 லட்சத்தை மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரத்தைச் சோ்ந்த நபா் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த இணைய முகவரி மூலம் பதிவு செய்த அவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறினராம். அதை நம்பிய அவா், அந்த நபா்கள் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.17,16,985 அனுப்பியுள்ளாா். பின்னா், அவா்களை தொடா்பு கொள்ள முடியாததால், சைபா் கிரைம் இணையதளத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் மீண்டும் அவரை தொடா்பு கொண்ட அதேநபா்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் மொத்த பணத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளனா். அதை நம்பி அவா் பணத்தை அனுப்பி மொத்தமாக ரூ.22,16,985-ஐ இழந்துள்ளாா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சித்தீன், சுவிஸ் குமாா் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும் சைபா் மோசடிகள் குறித்து 1930-என்ற எண் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் புகாா் அளிக்கலாம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை ரூ.5.47 கோடி மோசடி: திருநெல்வேலி மாநகரில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆன்லைன் மோசடி குறித்து 507 புகாா்கள் பெறப்பட்டதில், ரூ.5,41,19,593 வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், 399 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அதிலிருந்த ரூ.75, 84, 339-ஐ மாநகர காவல்துறை முடக்கியுள்ளது. மேலும் ரூ.92,91,648 மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காா் விபத்து: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா். ஏா்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா்கள் சமுத்திரப... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம் மோசடி: நெல்லை பொறியாளா் கைது

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த பொறியாளா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரம் அருகே உள்ள லட்சுமிநகரைச் சோ்ந்த கணேசன... மேலும் பார்க்க

நெல்லையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நி... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கூட்டுக்குடிநீா் குழாயில் கசிவு: ரயில்வே அனுமதி கோரிய மு. அப்பாவு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ரயில்வே எல்லைப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள நீா் கசிவை சரிசெய்ய, ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவ... மேலும் பார்க்க

சுரண்டை அருகே விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேரிட்ட விபத்தில் தையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் முகமது மைதீன் (60). தையல் கடை நடத்தி வந்தாா்.... மேலும் பார்க்க

நெல்லையில் ஆம்னி பேருந்துகளில் சோதனை

திருநெல்வேலியில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காலாண்டு விடுமுறை மற்றும் நவராத்திரி... மேலும் பார்க்க