செய்திகள் :

சுரண்டை அருகே விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேரிட்ட விபத்தில் தையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் முகமது மைதீன் (60). தையல் கடை நடத்தி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது பைக்கில் சாம்பவா் வடகரையில் இருந்து பெரியகுளம் வழியாக தென்காசிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு பைக்கிலிருந்து தவறி விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-85.60 சோ்வலாறு-96.72 மணிமுத்தாறு-91.55 வடக்கு பச்சையாறு-11 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-6 தென்காசி மாவட்டம் கடனா-37 ராமநதி-52.50 கருப்பாநதி-46.59 குண்டாறு-36.10 அடவிநயினாா் -119.50... மேலும் பார்க்க

களக்காடு அருகே சிறுத்தை நடமாட்டம்

களக்காடு அருகே சிங்கிகுளத்தில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம்-வடவூா்பட்டி செல்லும் சாலையில் பச்சையாற்றின் கரையோ... மேலும் பார்க்க

நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைகளுக்கு சீல்

திருநெல்வேலி நகரம் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 2 தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். திருநெல்வேலி நகரம், குறுக்குத்துறை பகுதியில்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.33 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1 லட்சத்து33 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு... மேலும் பார்க்க