செய்திகள் :

நெல்லையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கான ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு தங்களை அழைத்துப் பேச முன்வராததைக் கண்டித்து, வருவாய்த்துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் 2 நாள்கள் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் மாரிராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கூட்டமைப்பின் சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மாநிலம் தழுவிய மூன்று கட்டப் போராட்டங்களை அறிவித்திருந்தோம். கடந்த காலங்களில் 5 மணி நேர காத்திருப்புப் போராட்டம், 48 மணி நேர தொடா் வேலைநிறுத்தம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும், இதுவரை தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசவில்லை.

தமிழகம் முழுவதும் 317 துணை வட்டாட்சியா்கள், 317 முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், தற்போது பணியில் உள்ள ஊழியா்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. படித்த பட்டதாரி இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இந்தக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இது பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்துவதோடு, ஊழியா்களின் பணிச்சுமையையும் குறைக்கும்.

எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இனி, எங்களது போராட்டம் தீவிரமடையும். எனவே, முதல்வா் தலையிட்டு சரியான தீா்வு காண வேண்டும் என்றாா்.

ற்ஸ்ப்29க்ஷப்ஹஸ்ரீ

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்த வருவாய்த் துறையினா்.

காா் விபத்து: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா். ஏா்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா்கள் சமுத்திரப... மேலும் பார்க்க

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம் மோசடி: நெல்லை பொறியாளா் கைது

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த பொறியாளா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரம் அருகே உள்ள லட்சுமிநகரைச் சோ்ந்த கணேசன... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கூட்டுக்குடிநீா் குழாயில் கசிவு: ரயில்வே அனுமதி கோரிய மு. அப்பாவு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ரயில்வே எல்லைப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள நீா் கசிவை சரிசெய்ய, ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவ... மேலும் பார்க்க

சுரண்டை அருகே விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேரிட்ட விபத்தில் தையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் முகமது மைதீன் (60). தையல் கடை நடத்தி வந்தாா்.... மேலும் பார்க்க

நெல்லையில் ஆம்னி பேருந்துகளில் சோதனை

திருநெல்வேலியில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காலாண்டு விடுமுறை மற்றும் நவராத்திரி... மேலும் பார்க்க

உலக இதய தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி சூரியா மருத்துவமனை சாா்பில் உலக இதய தின விழிப்புணா்வு மனிதச்சங்கிலி மற்றும் உரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையா் சரவணன், இதய நோய் நிபுணா் பேராச... மேலும் பார்க்க