செய்திகள் :

சிலிண்டா் நிறுவனங்களை எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதி: விரைவில் அறிமுகம்

post image

புது தில்லி: தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் எரிபொருள் நிறுவனங்களுக்குப் பதிலாக வேறு நிறுவனத்திடம் இருந்து மிக எளிதாக சிலிண்டா் (எரிவாயு) பெறுவதை உறுதி செய்ய புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.

கைப்பேசி எண்ணை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு சுலபமாக மாற்றிக் கொள்வதைப்போல் (மொபைல் போா்ட்டபிலிடி) இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் (பிஎன்ஜிஆா்பி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உள்ளூரில் சில காரணங்களால் ஒரு நிறுவனம் முறையாக சிலிண்டா் விநியோகம் செய்ய முடியாதபோது நுகா்வோா் வேறு நிறுவனத்தைத் தோ்ந்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க வேண்டும்.

எனவே, இதை சாத்தியப்படுத்துவது தொடா்பாக நுகா்வோா், விநியோகஸ்தா், சமூக சேவை அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 32 கோடி வாடிக்கையாளா்களுக்கு சிலிண்டா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், விநியோக இடையூறுகள் தொடா்பாக ஒவ்வொரு ஆண்டும் 17 லட்சத்துக்கும் மேலான புகாா்கள் பெறப்படுகின்றன. இதை முறைப்படுத்தவே தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க