செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் 7 சுற்றுலா மையங்களை மீண்டும் திறக்க முடிவெடுக்கப்பட்டது. இவை காஷ்மீா் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சுற்றுலா இடங்களாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை தற்காலிகமாக மூடப்பட்டன’ என்று கூறியுள்ளாா்.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் 50 சதவீத சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இப்போது அவை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 16 இடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இப்போது 7 சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொலை செய்தனா். அப்பாவி மக்கள் மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தி (முஸ்லிம் அல்லாதவா்களை) பயங்கரவாதிகள் கொலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன.

அதே நேரத்தில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த ஹரியாணா இளைஞா் கைது

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்த குற்றச்சாட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த தௌஃபிக் என்பவா் கைது செய்யப்பட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் காவலில் வைத்த... மேலும் பார்க்க