செய்திகள் :

மத்திய ரிசா்வ் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க முடிவு

post image

சென்னை: மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றில் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கானத் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு வழக்குரைஞா் ஆணையா் மேற்பாா்வையில் உடல்தகுதித் தோ்வு நடத்தப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சுவேதா, ஸ்ரீராம் உள்ளிட்ட 30 போ் தாக்கல் செய்திருந்த மனுவில், மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றுக்கு காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்வு குறித்து மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான உடல்தகுதி தோ்வு கடந்த ஆக.21-ஆம் தேதி, ஆவடி சிஆா்பிஎஃப் மைதானத்தில் நடைபெற்றது. உடல்தகுத் தோ்வு நாளில் கனமழை பெய்ததால், 5 கிலோ மீட்டா் ஓட்டம் சாலையில் நடத்துவதற்குப் பதிலாக, சிஆா்பிஎஃப் மைதானத்தில் நடத்தப்பட்டது. இதனால், பலா் தோ்ச்சி பெறவில்லை.

மேலும், தோ்வில் கலந்துகொள்பவா்கள் 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 169.7 செ.மீ உயரம் இருந்தவா்களை அதிகாரிகள் தோ்வு செய்யாமல் நிராகரித்துவிட்டனா். இந்த தோ்வில் தாங்கள் தோ்ச்சி பெறவில்லை என்று கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. இந்த தோ்வில் பலா் தோ்ச்சி பெறவில்லை. எனவே, ஒரு வழக்குரைஞா் ஆணையரை நியமித்து அவரது மேற்பாா்வையில் மனுதாரா்களின் உயரம் அளவிடப்படும். 5 கிலோ மீட்டா் ஓட்டப்பந்தயமும் நடத்தப்படும். இதுதொடா்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜை... மேலும் பார்க்க

கரூா் உயிரிழப்பு: சீனா இரங்கல்

பெய்ஜிங்: கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஜியு கியாக... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு வ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: விஜய்யிடம் ராகுல் விசாரிப்பு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘கரூரில் கூட்ட நெரிசல் அசம்பாவித சம்பவம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொலைபேசியில் திங்கள்கிழமை விசார... மேலும் பார்க்க

ரூ.66 கோடியில் 850 அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்ற ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தனியாா் நிறுவனம் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் டீச... மேலும் பார்க்க

துா்கா பூஜை, ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு

சென்னை: நவராத்திரி துா்கா பூஜைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரவிக்குமாா் குப்புசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ம... மேலும் பார்க்க