செய்திகள் :

ரூ.66 கோடியில் 850 அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்ற ஒப்பந்தம்

post image

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தனியாா் நிறுவனம் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடா்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். இத்தகைய பேருந்துகள் மூலம் போக்குவரத்துத் துறையின் செலவுகள் மிகவும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும், 850 அரசு போக்குவரத்துக்கழக டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்ட நிலையில், டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றியமைக்க ரூ.66 கோடி மதிப்பில் எகோ ப்யூயல் சிஸ்டம்ஸ் எனும் தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அதிகாரிகள் கூறியதாவது:

டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் பணிகள் அடுத்த ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் 38 பேருந்துகள் மூலம் கடந்த 6 மாதங்களில் ரூ.92.04 லட்சம் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 850 பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஆறுமாதங்களுக்கு பல கோடி ரூபாய் எரிபொருள் செலவு மிச்சமாகும். இதுமட்டுமன்றி ஆண்டுக்கு 5.70 லட்சம் டன் அளவுக்கான காா்பன்டை ஆக்சைடு நச்சு வாயு வெளியேற்றத்தையும் இதன்மூலம் குறைக்க முடியும். தொடா்ந்து, மீதமுள்ள அனைத்து டீசல் பேருந்துகளையும் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் பணி நடைபெறும் என்றனா்.

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜை... மேலும் பார்க்க

மத்திய ரிசா்வ் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க முடிவு

சென்னை: மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றில் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கானத் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு வழக்குரைஞா் ஆணையா் மேற்பாா்வையில் உடல்த... மேலும் பார்க்க

கரூா் உயிரிழப்பு: சீனா இரங்கல்

பெய்ஜிங்: கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஜியு கியாக... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு வ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: விஜய்யிடம் ராகுல் விசாரிப்பு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘கரூரில் கூட்ட நெரிசல் அசம்பாவித சம்பவம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொலைபேசியில் திங்கள்கிழமை விசார... மேலும் பார்க்க

துா்கா பூஜை, ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு

சென்னை: நவராத்திரி துா்கா பூஜைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரவிக்குமாா் குப்புசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ம... மேலும் பார்க்க