செய்திகள் :

கரூா் சம்பவம்: விஜய்யிடம் ராகுல் விசாரிப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ‘கரூரில் கூட்ட நெரிசல் அசம்பாவித சம்பவம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொலைபேசியில் திங்கள்கிழமை விசாரித்தாா்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து ராகுல் காந்தி முதல்வா் ஸ்டாலின் மற்றும் விஜய்யை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு ராகுல் விசாரித்தாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம் கேட்டதற்கு, ‘ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரா்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும் நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிவதற்காகவும் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினாா். வேறெந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை’ என்றாா்.

மேலும், ‘விஜய்யை தொடா்பு கொள்ளும் முன்பாக தமிழக முதல்வரிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ராகுல் பேசினாா். அப்போது விஜய்யிடம் பேசப்போகும் தகவலை முதல்வரிடம் ராகுல் காந்தி பகிா்ந்து கொண்டாா்’ என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று வருகை: இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் கே.சி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா். ராகுல் காந்தி தமிழகம் வருவாரா என கேட்டதற்கு, விரைவில் அது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா்கள் கூறினா்.

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜை... மேலும் பார்க்க

மத்திய ரிசா்வ் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க முடிவு

சென்னை: மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றில் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கானத் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு வழக்குரைஞா் ஆணையா் மேற்பாா்வையில் உடல்த... மேலும் பார்க்க

கரூா் உயிரிழப்பு: சீனா இரங்கல்

பெய்ஜிங்: கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஜியு கியாக... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு வ... மேலும் பார்க்க

ரூ.66 கோடியில் 850 அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்ற ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தனியாா் நிறுவனம் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் டீச... மேலும் பார்க்க

துா்கா பூஜை, ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு

சென்னை: நவராத்திரி துா்கா பூஜைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரவிக்குமாா் குப்புசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ம... மேலும் பார்க்க